மகர சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்த கைதிகளின் எண்ணிக்கை 8-ஆக அதிகரித்துள்ள நிலையில் இந்தச் சம்பவம் குறித்து சுயாதீன விசாரணை நடத்தப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.
அரச அதிகாரி ஒருவர் தலைமையிலான விசாரணையை ஏற்க முடியாது எனவும் இன்று நாடாளுமன்றத்தில் இது குறித்துக் கருத்து வெளியிட்ட சஜித் பிரேமதாச கூறினார்.
சிறையில் கொரோனா வைரஸ் தொற்று நோய் வேகமாகப் பரவி வரும் நிலையில் சில கைதிகள் பி.சி.ஆர். பரிசோதனை நடத்துமாறு கோரியதையடுத்து கலவரம் வெடித்ததாக சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
இதேவேளை, இந்த சம்பவத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதை விட மேலும் பல கைதிகள் இறந்தும் காயமடைந்தும் உள்ளதாகத் தகவல்கள் கிடைத்துள்ளதாக ஜே.வி.பி. தலைவர் அனுரா குமார திசாநாயக்க கூறினார்.